tamilnadu

img

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க கவனம்

ரிசர்வ் வங்கி  கவர்னர்  கூறுகிறார்  

புதுதில்லி,பிப்.19-  மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக்கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில்  இந்திய பொருளா தார வளர்ச்சியை அதிகரிப்பதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்து கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு நிர்ணயித்துள்ள நிதி  பற்றாக்குறை இலக்கை எட்டமுடி யுமா? என சந்தேகப்பட வேண்டிய தில்லை, 3.5 சதவீதமாக நிதிப் பற்றாக் குறை எட்ட முடிந்த இலக்குதான். பட்ஜெட் மேலாண்மை மற்றும் நிதி பொறுப்பு (எஃப்ஆர்பிஎம்) குறித்த விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது. எட்டக்கூடிய இலக்கையே அரசு நிர்ணயித்துள்ளது. பட்ஜெட்  மேலாண்மை மற்றும் நிதிப் பொறுப்புக் குழு வரையறுத்த அளவீட்டின் படிதான் நிதி நிர்வாகத்தை அரசு  செயல்படுத்துகிறது.மத்திய நிதி யமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பட்ஜெட்டில் ஜிடிபி வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறுகிய காலத்தில் எட்டக்கூடிய வகையில் உள்ளன என்று கூறிக்கொண்டார். மேலும், தனிநபர் வரி விதிப்பில் சலுகை, வெளிநாட்டு நிறுவன முத லீடுகள் அதிகரிக்க வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது, கட்டமைப்பு திட்டப் பணி களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும்  உற்பத்தித்துறை, மின்னணு மற்றும் ஜவுளி தொழில் முன்னேற்றத்துக்கு தேவையான வழிமுறைகள் பட்ஜெட் டில் காணப்பட்டுள்ளன.  ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.